Wednesday 8th of May 2024 06:09:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர்  புதிதாக 4 பேருக்குக் கொரோனா!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் புதிதாக 4 பேருக்குக் கொரோனா!


நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் நேற்று 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் பெரிய மாநகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஆக்லாண்ட் நகரத்தில் மீண்டும் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொற்று நோயாளி கண்டறியப்பட்டார். அன்றுமுதல் இன்றுவரை 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் தொற்று நோயைச் சிறப்பாக நியூசிலாந்து கையாண்டது. இதனால் அங்கு தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டது. 102 நாட்கள் அங்கு புதிய தொற்று நோயாளா்கள் ஒருவா் கூட இனங்காணப்படவில்லை. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே அங்கு நேற்று 4 புதிய தொற்று நோயாளா்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE